தொழிலாளி வீட்டில் 29 பவுன் நகை திருட்டு

காரியாபட்டி அருகே தோப்பூரில் தொழிலாளியின் வீட்டுக் கதவை திறந்து 29 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

காரியாபட்டி அருகே தோப்பூரில் தொழிலாளியின் வீட்டுக் கதவை திறந்து 29 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரைச் சேர்ந்தவர் ராமுசின்னு (40). கட்டடத் தொழிலாளியான இவர், வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருந்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவி காளியம்மாள்(35), வெள்ளிக்கிழமை அருகிலுள்ள நியாய விலைக் கடைக்கு சென்றிருந்தாராம். அப்போது, வீட்டு சாவியை ஜன்னலில் வைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், வீடு திரும்பிய காளியம்மாள், கதவு திறந்திருந்ததால் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவிலிருந்த 29 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
புகாரின்பேரில், அங்கு சென்ற காவல் துறை கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மேலும், காவல் மோப்ப நாய் வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. இது குறித்து காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com