மண்டல அளவிலான இறகு பந்து போட்டி: திண்டுக்கல் பொறியியல் கல்லூரி முதலிடம்

விருதுநகர் அருகே காமராசர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல

விருதுநகர் அருகே காமராசர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான இறகு பந்து போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான இறகு பந்து போட்டி செவ்வாய்,  புதன் ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.
  இதில், 15 பொறியியல் கல்லூரியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
புதன்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் காமராசர் பொறியியல் கல்லூரியும், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியும் மோதின. இதில், 3-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றது.
 முதலிடம் பெற்ற அக்கல்லூரி அணிக்கு, காமராசர் பொறியியல் கல்லூரி செயலர் மகேஷ்குமார், உப தலைவர் தர்மராஜன், கல்லூரி முதல்வர் ஆனந்த் ஆச்சாரி, டீன் சாருகேசி ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com