அனுமதியின்றி மினிலாரியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு பறிமுதல்

சிவகாசியில் உரிய அனுமதியின்றி மினிலாரியில் எடுத்துச் செல்லப் பட்ட பாட்டாசு பண்டல்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சிவகாசியில் உரிய அனுமதியின்றி மினிலாரியில் எடுத்துச் செல்லப் பட்ட பாட்டாசு பண்டல்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
  சிவகாசி-நாரணாபுரம் சாலையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில், அனுமதியின்றி 20 பட்டாசு பண்டல்கள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான முருகன்காலனியைச் சேர்ந்த சுயம்புலிங்கராஜ் மகன் பிரதீஸ்வரனை(20) கைது செய்து, பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com