இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

சிவகாசி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

சிவகாசி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
   சிவகாசி அருகே செவலூரைச் சேர்ந்தவர் கருப்பையா(71). இவர் எரிச்சநத்ததில் உள்ள ஒரு தேனீர்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 10 ஆம் தேதி, தனது மொபெட்டில், எம்.புதுப்பட்டி-அழகாபுரிசாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு திருப்பத்தில் எதிர்பாராத விதமாக வண்டியிருந்து கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
     இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com