சபரிமலையில் பிரசித்தி பெற்ற புத்தாண்டு விஷூக்கனி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விஷூக்கனி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் சித்திரை மாத பூஜைகள் மற்றும் புத்தாண்டு விஷூக்கனி தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். விஷூக்கனி தரிசனத்தையொட்டி ஏப்ரல் 10- ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி சன்னிதான நடை திறந்து தீபம் ஏற்றினார். புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகத்தை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தொடங்கி வைத்தார். பின்னர் வழக்கமான பூஜைகள் தொடஙகின. உதய அஸ்தமன பூஜை, படிபூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
ஏப்ரல் -14ஆம் தேதி இரவு ஐயப்பனுக்கு அத்தாழபூஜை நடத்தி ஐயப்பன் முன் காய்கனிகள், பணம், காசு உள்ளிட்டவை பாத்திரத்தில் வைத்து நடை அடைக்கப்பட்து. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஷூக்கனிகாணும் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு கைநீட்டம் பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.
மாளிகைபுறம் மஞ்சமாதாகோவிலிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விஷூக்கனி தரிசனம் செய்தனர்.
வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். காலை 9 மணிக்கு உதய அஸ்தமன பூஜை, பகலில் களபாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறும்.
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அச்சன்கோவில், ஆரியங்காவு உள்ளிட்ட ஐயப்பன் கோயில்களிலும் விஷூ கனிகாணும் வைபவம் நடைபெற்றது.