ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராஜபாளையம் பகுதியில் கடந்த பிப்ரவரி முதலே வெயில் கொளுத்த தொடங்கியது. ராஜபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் பகல் நேரத்தில் சூரியன் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் செய்வதறியாது கவலையடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒருவாரமாக இப்பகுதியில் பலத்தமழைபெய்தது. ராஜபாளையம், அய்யனார்கோயில் ஆறு, ராக்காச்சியம்மன்கோயில் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் அதிக தண்ணீர்வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் சாஸ்தா கோவில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், 30 அடி உயரம் கொண்ட நீர்தேக்கம் முழுவதுமாக நிரம்பியது.
நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு 330 கனஅடி நீர் வரத்துள்ள நிலையில்,நீர்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 50 கனஅடி வெளியேற்றப்பட்டது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை அய்யனார் கோயில், சாஸ்தாகோயில், ராக்காச்சியம்மன்கோயில் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குளித்தனர்.
ராஜபாளையம் பகுதியில் கோடைகாலத்தில் தொடர்ந்து பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவல்துறையினர், வனத்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.