சிவகாசியில் அரசு சுவரில் அனுமதியின்றி கட்சி விளம்பரம் செய்ததாக புதிய தமிழகம் கட்சி நிர்வாகி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் , இரட்டைப் பாலம் சுவரில் புதிய தமிழகம் கட்சி விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் எழுதுவதற்கு நகராட்சியிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லையாம். இதுதொடர்பான புகாரின்பேரில், அரசு சுவரில் அனுமதியில்லாமல் விளம்பரம் செய்ததாக புதிய தமிழகம் கட்சி நிர்வாகி ஊராம்பட்டி மாணிக்கம்(45) மீது சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.