ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை ஆபாசமாகப் பேசி காலணியால் தாக்கியதாக இரு பெண்கள் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
வத்திராயிருப்பு, நொண்டியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் இ.பாண்டி பிரதாப் (20). இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 20.12.17 ஆம் தேதி தனது வீட்டின் முன்பு நட்சத்திர அலங்காரம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் கீர்த்தனா தமிழ்செல்வி (22) மற்றும் ராணி (எ) பாக்கியம் (42) ஆகியோர் பாண்டி பிரதாப்பை ஆபாசமாகப் பேசி காலணியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.
இது குறித்து பாண்டி பிரதாப், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் முறையீடு செய்தார். வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு
செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸார் கீர்த்தனா தமிழ்செல்வி மற்றும் ராணி (எ) பாக்கியம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.