ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்தில் திங்கள்கிழமை தீ தொண்டு நாள் விழா நடைபெற்றது.
தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) பா.ஜெயராஜ் தலைமை வகித்தார். தீயணைப்பாளர் த.கதிரேசன் முன்னிலை வகித்தார். நகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஏ.ஜெயப்பிரகாஷ், ஓய்வு பெற்ற தீயணைப்பு அலுவலர் எஸ்.பிச்சை ஆகியோர், தீயினால் ஏற்படும் இழப்பு மற்றும் தேசிய சிறப்பு தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
முன்னதாக தீ விபத்து மற்றும் மீட்பு சேவையின் போது
மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைப்புப் படையினர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் மெளன அஞ்சலி
செலுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.