சிவகாசியில் வெள்ளிக்கிழமை (டிச.7) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் மின் நுகர்வோர் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம் என அவர் தெரிவித்துள்ளார்.