செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

விருதுநகர் அருகே சொத்து பிரச்னையில் இளைஞர் ஒருவர் செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி சனிக்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் அருகே சொத்து பிரச்னையில் இளைஞர் ஒருவர் செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி சனிக்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் அருகே உள்ள ஆர்ஆர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயபாண்டி(37). இவர் தனது தந்தையிடம் சொத்துக்களை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மாரியப்பன் மறுத்ததால் தந்தை மகனுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாரியப்பன் வச்சகாரபட்டி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். இது குறித்து ஜெயபாண்டியிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
தனது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ஜெயபாண்டி, சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வச்சகாரபட்டி போலீஸார், சொத்துக்களை பிரித்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஜெயபாண்டி கீழே இறங்கி வந்தார்.
இது குறித்து வச்சகாரபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com