அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, தாளாளர் காசா மைதீன் தலைமை உரையாற்றினார். செயலர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். பள்ளியில் தமிழ்ப் பாரம்பரியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக, ஐவகை நிலம் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டிருந்தது.
பள்ளி சார்பில் யோகா ஆசிரியர் சுந்தர்ராஜன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து பொங்கலிட்டனர். இதில், சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஜெயந்தி அண்ணாதுரை பங்கேற்றுப் பேசினார்.
இதில், பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களது பெற்றோருக்கும் கோலப் போட்டி,திருக்குறள் ஒப்பித்தல் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், விஸ்டம் கல்விக் குழும உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.