விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்த வட்டாட்சியர்கள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த பா. ராமச்சந்திரன் ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியராகவும், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியராகப் பணிபுரிந்த சரவணன் அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியராகவும், விருதுநகர் நகர நிலவரி திட்ட தனி வட்டாசியர் கை. பாலசுப்பிரமணியன் விருதுநகர் வருவாய் வட்டாட்சியராகவும், விருதுநகர் வட்டாட்சியர் செய்யது இப்ராஹிம் ஷா சிவகாசி (தீப்பெட்டி தொழிற்சாலை) வட்டாட்சியராகவும், சிவகாசி (தீப்பெட்டி தொழிற்சாலை) தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த சங்கரபாண்டியன் சாத்தூர் தனி வட்டாசியராகவும் (நில எடுப்பு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.