சாத்தூரில் கால்பந்து போட்டி

சாத்தூரில் பொங்கலை முன்னிட்டு 4ஆம் ஆண் டாக ஒரு நாள் கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாத்தூரில் பொங்கலை முன்னிட்டு 4ஆம் ஆண் டாக ஒரு நாள் கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பொங்கலை முன்னிட்டு ஆர்.சி.யூத் புட்பால் கிளப் நடத்தும் 4ஆம் ஆண்டு ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது. 9 நபர்கள் மட்டும் கலந்துகொள்ள கூடிய இந்த போட்டியில் சாத்தூர், சிவகாசி, தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி, மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 கால்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். 
இதில் நெல்லை அணி முதல் பரிசையும், சாத்தூர் அணியினர் இரண்டாவது பரிசையும், சிவகாசி மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசுரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ. 5 ஆயிரமும் வழங்கபட்டது.
போட்டி ஏற்பாடுகளை ஆர்.சி.யூத் புட்பால் கிளப் நிர்வாகிகள் அந்தோணி மற்றும் பிரகாஷ், ஆனந்தராஜ்ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com