ராம்கோ குரூப் பஞ்சாலைகளின் பிரிவான ராஜபாளையம் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சுமார் 600 தொழிலாளர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் வந்து கல்வி உதவித்தொகையை பெற்றுச் சென்றனர். இதில், மொத்தம் ரூ. 8,70,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. இதில், ஆலையின் தலைமை நிர்வாக இயக்குநர் என். மோகனரெங்கன் மற்றும் பொது மேலாளர் மனிதவளம் சு. பிரபுராஷ் பங்கேற்று, கல்வி உதவித்தொகையை வழங்கினர். தொழிற் சங்கத்தின் சார்பாக, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர் பி.எம். ராமசாமி, ஹெச்எம்எஸ். சு. மாரிராஜ், ஐஎன்டியுசி நிர்வாகி சு. கண்ணன் மற்றும் தொழிற்சங்கப் பிரதிகள் பலர் கலந்துகொண்டனர்.