பச்சேரியில் குளியல் தொட்டி மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

திருச்சுழி அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் குளியல் தொட்டியுடன் கூடிய மின்மோட்டாரைப் பழுது நீக்கக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருச்சுழி அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் குளியல் தொட்டியுடன் கூடிய மின்மோட்டாரைப் பழுது நீக்கக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பச்சேரி கிராமத்தில் சுமார் 900 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்கென மின்மோட்டாருடன் கூடிய குளியல் நீர்த்தொட்டி உள்ளது. இத்தொட்டி நீரைத்தான் நாள்தோறும்  நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குளிப்பதற்குப்  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அத்தொட்டியுடன் இணைந்த  மின்மோட்டார் பழுதடைந்து பலமாதங்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் இக்கிராமத்தினர் குளிப்பதற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் கிணறுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உரிய நேரத்தில் பணிகளுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பச்சேரி கிராமத்தில் குளியல்நீர்த்தொட்டியுடன் இணைந்த மின்மோட்டாரை விரைவில் பழுது நீக்கிப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com