சாத்தூரில் அதிமுக அம்மா அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கட்சி அலுலகத்தில் இக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சி அறிமுகம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு, சாத்தூரிலிருந்து நகர, ஒன்றியம் சார்பாக மேலூர் செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
திங்கள்கிழமை காலையில், எதிர்கோட்டையில் எஸ்.ஜி. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.