திருத்தங்கல்லில் செவ்வாய்க்கிழமை மின்கம்பத்தில் மணல் லாரி மோதியதில் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
திருச்சுழியிலிருந்து ஒரு லாரி மணல் அள்ளிக்கொண்டு திருத்தங்கல் வந்தது. லாரியை மதுரையைச் சேர்ந்த பூசாரி என்பவர் ஓட்டி வந்தார். லாரி திருத்தங்கலில் வடக்கு ரதவீதியில், திரும்பும் போது, லாரியின் பின்பக்கம் அப்பகுதியிலிருந்த மின்கம்பத்தில் மோதியது.இதில் மின்கம்பம் சற்று சாய்ததையடுத்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. லாரியின் பின்சக்கரங்கள் கழிவு நீர்வாய்காலில் பதிந்துவிட்டது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்துப் பாதித்தது. பின்னர் லாரி ஜேசிபி இயந்திரம் மூலம் வாய்காலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் மின்தடை ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதித்தது.