பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கான ஆயத்த கூட்டம்

விருதுநகர் கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

விருதுநகர் கேவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
     பள்ளி கல்வி இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து விவரிக்கப்பட்டது. இதில், தேர்வு மையங்களுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டு காப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
    கூட்டத்தில்,  மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com