வெம்பக்கோட்டை அருகே மேலான்மரைநாடு புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் 2 நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் வாசிப்பு பயிற்சி குறித்து மாணக்கர்களுக்கு ஊக்குவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் மேலான்மரைநாட்டில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதில், பொது அறிவு, அறிவியல், தேசிய தலைவர்கள், வரலாறு தொடர்பான ஏராளமான புத்தகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இவற்றை, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கீழகலங்கலைச் சேர்ந்த சண்முகவேல் செய்திருந்தார். இதில், மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் செபாஸ்டியன் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.