தொலைபேசி ஆபரேட்டர் இடமாறுதல் தொடர்பாக, விருதுநகர் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலுவலகப் பணியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், சேவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜகுரு, தேசிய தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ராம்சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொலைபேசி ஆபரேட்டர்களாக பணிபுரிபவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாறுதல் வழங்கப்படும். ஆனால் தற்போது, 3 ஆண்டுகளுக்குப் பின்னரே இடமாறுதல் வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை ரத்து செய்து, பழைய முறையை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.