சிவகாசி அருகேசமையல் செய்தபோதுதீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சித்துராஜபுரம் ராமசாமி நகரைச் சேர்ந்த தாத்தையாசுவாமியின் மனைவி பத்மாவதி(54).இவர் கடந்த 1 ஆம் தேதி எரிவாயு அடுப்பில் சமையல் செய்தபோது, சேலையில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. பலத்த தீக்காயமடைந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.