விருதுநகரில், வருமான வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், வருமான வரி செலுத்துவது தொடர்பான வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு மதுரை வருமான வரித்துறை இணை ஆணையர் பென் மேத்யூ வர்கீ தலைமையிலான அலுவலர்கள் பதிலளித்தனர்.
விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் விவிஎஸ் யோகன் தலமை வகித்தார். இதில், மதுரை வருமான வரித்துறை (வரி பிடித்தம்) இணை ஆணையர் பென் மேத்யூ வர்கீ, உதவி ஆணையர் கே.ஆர். சதீஷ்பாபு, வருமான வரி ஆய்வாளர் வெங்கிட கிரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வருமான வரி செலுத்துவது குறித்த வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு அலுவலர்கள் விளக்கமளித்தனர். கூட்டத்தில், வியாபார தொழில் துறை சங்க செயலாளர் முத்து உள்பட ஏராளமான வியாபாரிகள், ஆடிட்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆடிட்டர் முருகதாஸ் நன்றி கூறினார்.