விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் பள்ளி மாணவி ஒருவர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருத்தங்கல் நகராட்சி 7ஆவது வார்டில் உள்ள ராதாகிருஷ்ணன் காலனியைச் சேர்ந்த அருள்குமார் (32) என்பவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்ப்பட்டு கடந்த 7ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து திருத்தங்கல் நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கொசு மருந்து தெளிக்கும் பணிகளைஅப்பகுதியில் மேற்கொண்டனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகளும், மூன்றாம் வகுப்பு மாணவியுமான சாதனா (7) கடந்த சில நாள்களுக்கு முன்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இச்சிறுமிக்கு பன்றிக் காய்சல் அறிகுறி உள்ளதாக மருத்துவர் கூறினாராம். இதைத் தொடந்து அச்சிறுமி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே ராதாகிருஷ்ணன் காலனியில் சுகாதாரப் பணிகளை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.