ஆவியூர்துணைமின்நிலையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வரும் அக்டோபர்15 ஆம் தேதி (திங்கள்கிழமை) மின்தடை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆவியூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் அக்டோபர் 15 ஆம் தேதி (திங்கள்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆவியூர், காரியாபட்டி, தோணுகால், புல்வாய்க்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.