திறன் போட்டியில் தேசிய அளவில் பரிசு பெற்ற சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தில்லி தேசிய மாணவர் படை சார்பில் ஆண்டுதோறும், தேசிய அளவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு திறன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதல், கூடாரம் அமைத்தல், தடைதாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.
அண்மையில் தில்லியில் நடைபெற்ற இப்போட்டியில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர் மாரீஸ்வரன் கூடாரம் அமைத்தல் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று பரிசு பெற்றுள்ளார்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர் சே.அசோக், மாணவரை பாராட்டி பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி தேசிய மாணவர் படை கமாண்டர் நீ.டென்சிங்பாலையா செய்திருந்தார்.