சிவகாசியில் ஆவின் விற்பனை நிலையத்தை சனிக்கிழமை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். இங்குள்ள ஜக்கம்மாள் கோயிலருகே ஆவின் விற்பனை நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.