தண்ணீர் லாரி மோதி பிளஸ் 2  மாணவி காயம்: ஓட்டுநர் கைது

அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை தண்ணீர் லாரி மோதியதில்  பிளஸ் 2 மாணவி

அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை தண்ணீர் லாரி மோதியதில்  பிளஸ் 2 மாணவி பலத்த காயரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டார். காந்திநகர் பிரதான சாலைக்கு வந்தபோது பின்னால் வந்த தனியார் தண்ணீர் லாரி எதிர்பாராவிதமாக சாராள் மீது மோதியதாம். இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சாராள் இடது கையில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதுதொடர்பாக  அருப்புக்கோட்டைத் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிந்துலாரி ஓட்டுநர் குருமூர்த்தியைக் கைது செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com