விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் சமுதாயக் கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில், எஸ் மறைக்குளத்தில் ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடம், வி. நாங்கூரில் ரூ.12 லட்சம் மற்றும் விட்டிலாரேந்தலில் ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்டது. இவற்றையும், சித்தனேந்தலில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட மன மகிழ் மன்றம் , நரிக்குடி அருகே இருவர் குளத்தில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை ஆகியனவற்றையும் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இதில், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.