அருப்புக்கோட்டையில் நித்யானந்த சுவாமி என்கிற மலையரசன் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை தெற்குத்தெரு பகுதியில் உள்ளது இக்கோயிலில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மாலை 6 மணிக்கு நித்யானந்த சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீப,தூப ஆராதனைகள் முடிந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முழு அலங்காரத்தில் நித்யானந்த சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து சிறுதேரில் சுவாமி கிரிவலம் நடைபெற்றது. இந்த விழாவின்போது கோயிலின் உற்சவ மண்டபத்தில் நடன ஆசிரியர் ஜெயக்குமாரின் சிறப்பு பாரம்பரிய நடன, நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கிரிவல விழாவிற்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மிகநீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.