ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
13 சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த 4 ஆம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து 11 நாள்கள் பல்வேறு சமுதாயத்தினரால் நடத்தப்பட்ட விழாவில் முப்புடாதி மற்றும் வடகாசி அம்மன் சிம்ம வாகனம், புஷ்ப பல்லக்கு, ரிஷப வாகனம் உள்ளிட்ட ப்லவேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.