விஸ்வகர்மா ஜயந்தி விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில்  விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பாக விஸ்வகர்மா ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.  

ஸ்ரீவில்லிபுத்தூரில்  விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பாக விஸ்வகர்மா ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.  
 இவ்விழாவிற்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பூமாரி முருகேசன், விவசாயத்துறை ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் சரவணமாரி, அனைத்து விஸ்வகர்மா முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு அமைப்பு தலைவர் சக்திநடேசன், தமிழ்நாடு நகைத்தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் முனியராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் விஸ்வகர்மா பிர்க்கா பொற்கொல்லர் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் சரவணன், பொருளாளர் சந்தனம், ஆலோசகர்கள் பாண்டியராஜன், ராஜகோபால், நகர நகைத்தொழில் வாலிபர் முன்னேற்ற பேரவை தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விஸ்வகர்மா கொடியை நகைத்தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் விஸ்வகர்மாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  
தொடர்ந்து விஸ்வகர்மா சமுதாயத் தலைவர்கள் மற்றும் சமுதாய மக்கள் கலந்து கொண்ட பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மாதா கோயில் தெருவை அடைந்தது. 
அங்கு நடைபெற்ற விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா ஜயந்தி விழா கமிட்டி தலைவர் முருகன், துணைத் தலைவர் கண்ணன், இணைத் தலைவர் சந்தனம், செயலாளர் சிவக்குமார், துணைச் செயலாளர் பொன்ராஜ், இணைச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com