அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரசு கல்லூரி என அறிவித்து ஆணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சாத்தூர் அருகேயுள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கல்லூரி என அறிவித்து ஆணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சாத்தூர் அருகேயுள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த சின்னகாமன்பட்டியில்  மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு, தமிழ்நாடு அரசு உறுப்புக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் சாத்தூர் கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ் துறைத் தலைவரும், கிளைத் தலைவருமான ம. பெரியசாமி தலைமை உரையாற்றினார். இதில், உறுப்புக் கல்லூரியாக அறிவித்தது குறித்து உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கல்லூரியில் பணிபுரியும் அனைவருக்கும் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.     ஆர்ப்பாட்டத்தில், அரசு கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர், உதவிப் போராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக, வணிகவியல் துறைத் தலைவரும், கிளைச் செயலருமான பெரியசாமி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com