சாத்தூரில் மர்மமான முறையில் வயதான தம்பதி இறந்து கிடந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே காட்டுப் பள்ளிவாசல் பகுதியில் மர்மமான முறையில் வயதான தம்பதி இறந்து கிடந்தனர். இது குறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார், சம்பவ இடத்துத்குச் சென்று பார்வையிட்டு, அவர்களது சடலங்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறேதும் காரணமா என, சாத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.