இலக்கிய மன்ற தொடக்க விழா

ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் மகாத்மா காந்தி கல்வியியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் மகாத்மா காந்தி கல்வியியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அழகர் முன்னிலை வகித்தார்.
ராஜூக்கள் கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு பாரதி நினைவு நாளை முன்னிட்டு, பாரதிகாட்டும் பாவையர்' எனும் தலைப்பில் பேசினார். இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் டயானா, கார்த்திகா, கோமதி ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்த்துறைத் தலைவர் சாரதா வரவேற்றார். ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com