சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் வடமலாபுரத்தில் சனிக்கிழமை துப்புரவுப் பணி நடைபெற்றது.
இதையொட்டி மாணவர்கள் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் , குடிநீர் மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், தெருவோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியை குருமகேஸ்வரி செய்திருந்தார்.