கொலை வழக்கில் 3 பேர் சரண்

விருதுநகரில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் செவ்வாய்க்கிழமை மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

விருதுநகரில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் செவ்வாய்க்கிழமை மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
   விருதுநகர் மாத்தநாயக்கன்பட்டி சாலையை சேர்ந்தவர் சங்கர் என்ற சங்கரேஸ்வரன்(47). இவரை முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் வெட்டிக் கொலை செய்தனர். 
இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது விருதுநகர் கிழக்கு காவல்நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், விருதுநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் விக்கி என்ற விக்னேஷ், சதீஷ்குமார், ராஜ்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மதுரை 4 ஆவது குற்றவியில் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். 
அவர்களை, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com