சாத்தூர் அருகேயுள்ள உப்பத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உப்பத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் இம்முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சாத்தூர், உப்பத்தூர், ஓடைபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பாலுட்டும் தாய்மார்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுந்தரி, உப்பத்தூர் மருத்துவ அலுவலர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் (பொறுப்பு) பொன்னுத்தாய் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்து பேசினர். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முகாமில் அங்கன்வாடி மற்றும் சமூநலத்துறை அதிகாரிகள், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.