கருத்துரிமையை பாதுகாக்கக் கோரி தெருமுனை பிரசாரம்

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதை

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை இரவு தெருமுனை பிரசாரம் நடத்தினர். 
   அதில், இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் முதலானோரை போலீஸ் மூலம் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்து வருகின்றனர். இது கருத்துரிமை, அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். மேலும், தமிழக அரசு எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்திப்பவர்களை கைது செய்கிறது. 
அதேபோல், துண்டு பிரசுரங்கள் வழங்கினாலும் கைது செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்க செயல் என வலியுறுத்தினர். இதில், நகர் செயலாளர் எல்.முருகன், ஜேசிடியு செயலாளர் தேனிவசந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நகர்குழு உறுப்பினர்கள் பி.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com