காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மானிய விலையில் தோட்டக்கலை செடிகள் இன்று முதல் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் அறிவியல் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட நகராட்சித் திடலில் செயல்பட்டுவரும் உயர்ரக தோட்டக்கலை செடிகள் விற்பனை நிலையத்தில், ஏப்.14 முதல் மானிய விலையில் செடிகள் விற்பனை செய்யப்படவுள்ளது. அனைத்து வகை தோட்டக்கலை செடிகள், அலங்கார மற்றும் பழ வகை செடிகள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் காலை 10 மணி முதல் இந்த நிலையத்துக்கு வந்து தரமான செடிகளை வாங்கிப் பயனடையலாம் என்றார்.