அட்சய திருதியை முன்னிட்டு, காரைக்கால் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் உதய கருட சேவை சனிக்கிழமை (ஏப். 29) நடைபெறவுள்ளது.
இதையொட்டி, காரைக்காலில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு உதய கருட சேவை நடைபெறுகிறது. கருட வாகனத்தில் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் வீதியுலா புறப்பாடு செய்யப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் பெருமாளுக்கு வெண்பட்டு சாற்றி வழிபாடு செய்தவது சிறப்பு என கோயில் நிர்வாகத்தார் தெரிவிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. இதேபோன்று திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ வீழி வரதராஜபெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களிலும் கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகங்கள் செய்துள்ளன.