காரைக்காலில் நாளை தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு

காரைக்காலில் தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) நடைபெறுகிறது என அதன் மாவட்ட தலைவர்  அஷ்ரப்கான் தெரிவித்தார்.

காரைக்காலில் தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) நடைபெறுகிறது என அதன் மாவட்ட தலைவர்  அஷ்ரப்கான் தெரிவித்தார்.
இதுகுறித்த அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாநாடு நடத்தப்பட்டு, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி "இறைவன் ஒருவனே' என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் தொடர் மாவட்ட மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை மாலை "முஹம்மதூர் ரசூலுல்லாஹ்' என்கிற மாநாடு நடைபெறவுள்ளது. அனைத்து சமூக மக்களும் பின்பற்றக்கூடியவராக முகம்மது நபி உள்ளார் என்பதை தெரிவிக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com