காரைக்கால் அருகே கட்டடத்துக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார்.
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன், ஊழியப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (48). இவர் செக்யூரிட்டி மையம் நடத்திவந்தார். அதே பகுதியில் வீடுகட்டிவருகிறார். சனிக்கிழமை காலை கட்டடத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். அப்போது, மின் கம்பியில் தண்ணீர் சிந்தியதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. பின்னர், காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலகிருஷ்ணன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நிரவி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.