காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

காரைக்காலில் மண்டல காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் மண்டல காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கடற்கரை சாலையில், சுதந்திர தினக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) நடைபெறவுள்ளது. இதில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பங்கேற்று தேசியக் கொடியேற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம், கடற்கரை சாலையில் மேற்கொண்டுவருகிறது. சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியாக, காவல் துறையினரின் அணிவகுப்பு, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து மேற்பார்வையில் போலீஸார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் புதுச்சேரி காவல்துறையினர், இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் பிரிவினர், என்.சி.சி. மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கலைநிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழுவினரும் ஒத்திகையில் ஈடுபட்டனர். இவற்றை காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டு,  ஆலோசனை வழங்கினர். ஒத்திகை நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com