காரைக்கால் அரசு மருத்துவமனையை மேம்படுத்த ஜிப்மர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம்

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, காரைக்கால் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என, காரைக்கால் திமுக

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, காரைக்கால் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை அமைப்பது தொடர்பாக முந்தைய ஆட்சியில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை மேம்படுத்த  ரூ. 30 கோடி வழங்குவதாக ஜிப்மர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும், ஜிப்மர் நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி, காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கான நிதியை இதுவரை தரவில்லை. இந்த நிதி கிடைக்கும்பட்சத்தில், காரைக்கால் மருத்துவமனையில் இருதய சிகிச்சைப் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உயிர்காக்கும் பிரிவுகளை மேம்படுத்தமுடியும்.
இதுகுறித்து, காரைக்காலைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளோ, புதுச்சேரி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களோ கண்டுகொள்ளாதது புரியாத புதிராகவே இருக்கிறது.
இப்பிரச்னையில் புதுச்சேரி முதல்வர், நலவழித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com