காரைக்கால் அரசு மருத்துவமனையில் திருவாரூரைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்தார்.
இவர் குறித்த விவரம் தெரிந்தோர் காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீரப்பிள்ளை மகன் ராஜா (60), மதகடி, திருவாரூர் என கூறிக்கொண்டு ஒருவர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இவரது விவரம் தெரிந்தோர், காரைக்கால் நகரக் காவல் நிலையத்தை 04368222402 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.