காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் டிச. 9 -ஆம் தேதி சிறுநீரக மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் வியாழக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை ( டிச. 9) சிறுநீரக மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்கின்றனர். காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாமில் சிறுநீரக நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.