காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளராக எஸ்.சேகர் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றிய வி. சண்முகசுந்தரம், பதவி உயர்வு பெற்று புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராகப் பொறுப்பேற்றார். இந்த இடம் காலியாக இருந்த நிலையில், கடந்த நவ.16-ஆம் தேதி செயற்பொறியாளராக (நீர்ப்பாசனம்) பணியாற்றி வந்த ஜி. இளஞ்செழியன் பதவி உயர்வுபெற்று கண்காணிப்புப் பொறியாளராக காரைக்காலில் பொறுப்பேற்றார். இவர் கடந்த நவ.30-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், புதுச்சேரியில் செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்த எஸ். சேகர் காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று வியாழக்கிழமை பொறுப்பேற்று, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதி பெறப்பட்டு பொதுப்பணித்துறையில் பல்வேறு பணிகள் செய்ய விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், காரைக்காலில் சாலைகள் புதுப்பிக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.