காரைக்கால் பகுதியில் இன்று சிறப்பு மின் கட்டண வசூல்

காரைக்கால் பகுதி விழுதியூரில் சிறப்பு மின் கட்டண வசூல் மையம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதி விழுதியூரில் சிறப்பு மின் கட்டண வசூல் மையம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மின் துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின் துறையின் சிறப்பு மின் கட்டண வசூல் மையமானது செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) விழுதியூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள மையத்தில் காலை 9 முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
கார்க்கமொழி, தூதுபோனமூலை, ஊழியப்பத்து, விழுதியூர், மானாம்பேட்டை, பேட்டை, அகலங்கண்ணு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது மின் கட்டணத்தை செலுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com