ஜூலை 1 முதல் 31 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

வரும் ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தகுதி வாய்ந்த இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்குதல் ஆகியவற்றுக்கான சிறப்புப்பணி வரும் 1.7.2017 முதல் 31.7.2017 வரை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31-ஆம் தேதி நிறைவடையும் இந்த சிறப்புப் பணியின்போது அதிகாரிகளின் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். மேலும் தபால் மூலமாகவும் அனுப்பலாம். 9.7.2017 மற்றும் 23.7.2017 ஆகிய இரு தினங்களில் அனைத்து வாக்குச் சாவடியில் நடைபெறும் சிறப்பு முகாமிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com